Monday, May 30, 2011

என்ன கொடுமை சார் இது!

29/05/2011 அன்று என் மனைவியுடன் பண்ருட்டியிலிருந்து விக்கரவாண்டி வரை என்னுடைய காரில் சென்று திரும்ப வேண்டிய அலுவல் இருந்தது.   பண்ருட்டியிலிருந்து விழுப்புரம் கூட்டுரோடு வரை குண்டும் குழியுமான சாலை என் வேகத்தை குறைத்தது, கோபத்தை கூட்டியது, என் மனைவியின் உடல் நிலையை பாதித்தது (அவள் கர்ப்பமாக இருக்கிறாள்) என் காரின் தேய்மானம் அதிகரித்தது. 

இப்படிப்பட்ட சாலைக்கா நாம் வரி கட்டுகிறோம் என்று எரிச்சல் வந்தது. போதாகுறைக்கு விக்கரவாண்டியில் உள்ள சுங்கச்சாவடியில் பயன்படுத்தாத சாலைக்காக ருபாய் 112/- செலுத்த நேர்ந்தது. 

சாலைகளையும் ஆலைகளையும் அமைக்க வேண்டிய அரசுகள்,  எரிவாயு அடுப்பும் தொலைகாட்சி பெட்டியும் வாங்க செலவு செய்தால் நாடு குட்டிச்சுவராகாமல் வல்லரசாகவா மாறும்?

ஜோசப். 

Wednesday, May 25, 2011

கனிமொழிக்கு பினைவிடுப்பு தரலாமா?

ராஜ்ய சபை உறுப்பினரான திருமதி கனிமொழிக்கு நீதிமன்ற காவல் தேவையா? ....  ஒரு ஆங்கில படத்தில் வழக்கறிஞர் தன் கட்சிகாரருக்காக வாதாடுகையில், "... என் கட்சிகாரர் மிகவும் மோசமானவர், யாரையும் மதிக்கமாட்டார், எடுத்தெரிந்தாற்போல் பேசுவார், திமிராக நடந்து கொள்வார், அவரை எதிர் கட்சிக்காரருக்கு மட்டுமல்ல, எனக்கும் தான் பிடிக்காது.... ஆனால் இப்படிப்பட்ட காரணங்களுக்காக அவர் மீது கொலை பழி சாட்டுவது நியாயமல்ல"   ... என்று கூறுவார்.

திமுக மீது தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டு மிகவும் மோசமானதுதான், அதற்கு அவர்கள் விலையும் கொடுத்துவிட்டார்கள்.  அதிக தொகுதிகள், கேட்ட தொகுதிகள், தங்கபாலுவை வைத்து ....கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி........  என்பதுபோல் உட்கட்சி குழப்பம் (தங்கபாலுவுக்கு வேட்பு மனுவை முறைப்படி  தாக்கல் செய்ய தெரியாதா?), இதனால் காங்கிரஸ் காரர்களே எதிரணிக்கு ஒட்டு போட தூண்டப்பட்டது, கூட்டணி கட்சியை கைவிட்டது என்று கூடி கெடுத்தது காங்கிரஸ்.  மற்ற மூன்று மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்ட காங்கிரஸ், தமிழ்நாட்டில் மட்டும் எப்படி மண்ணை கவ்வியது?  மகன் செத்தாலும் பரவாயில்லை மருமகள் தாலி அறுக்கணும் என்று திமுகவை கைவிட்டு குழியில் தள்ளியது காங்கிரஸ்.

176000 கோடி அரசுக்கு வருமான இழப்பு. அந்த அளவுக்கு யாரோ பயனடைந்துள்ளனர். அதற்கு பதிலாக அவ்வளவு பணத்தையுமா பயனடைந்தவர்கள் திமுகவினருக்கு கொடுத்திருப்பார்கள்?

திருட்டு பொருளுக்கு தீட்டு விலை. அதிகபட்சம் 20000 கோடிக்கு மேல் இதனால் யாரும் (ராசா, திமுக, etc ) பயனடைந்திருக்கமாட்டார்கள்.  இந்த வரம்பு மீறல் நடந்ததற்கு முன்னரும் , நடக்கும் போதும்  ஜனநாயகத்தின் இரண்டாவது தூணான அதிகார வர்க்கம் என்ன செய்துகொண்டிருந்தது? இதில் ராஜாவுக்கு மட்டும் தான் பங்கு இருக்கின்றதா? அவ்வளவு திறமைசாலியா நம் ராஜா? 


மதுவகைகளை கடத்தி விற்பவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கும் நாடு ஒன்றில் மது கடத்தல்காரனிடம் மறைவிடத்தில் மதுவை விலைக்கு  வாங்கிய அந்த நாட்டு நீதிபதி அவனிடம் சொன்னானாம், "நீ போலீசில் மாட்டிக்கொண்டால், நானே உனக்கு மரண தண்டனை விதிக்க நேரிடும், ஜாக்கிரதையாய் இரு" என்று!

1984 சீக்கிய இன படுகொலையை திட்டமிட்டு செயல்படுத்திய காங்கிரஸ், தமிழின படுகொலையை தட்டி கேட்காத காங்கிரஸ், சினிமா கதாநாயகன் போல் பாதுகாப்பு முறைகளை மதிக்காமல், இரண்டு சக்கர வண்டியில்,  போராட்டம் நடத்தும் விவசாயிகளை சந்திக்க சென்ற ராகுல், சிறுபிள்ளைதனமாக எழுபது அடி பள்ளம் முழுக்க  சாம்பல் உள்ளது, அவை எல்லாம் மனிதர்களை எரித்த சாம்பல் என்று அறிக்கைவிட்ட அவலம் நிகழ்ந்த காங்கிரஸ், ஏதோ சுத்த சன்மார்க்கர்கள் போல் குற்றம் செய்தவர்களை சட்டம் சும்மா விடாது என்று அறிக்கை விடுவது யாரை ஏமாற்றுவதற்கு?

குற்றம் நடக்கும் போதும், அதற்கு முன்னரும் பதவில் இருந்தவர்கள், அதிகாரத்தை கையில் வைத்திருந்தவர்கள் அனைவரும் எங்கு இருக்கிறார்கள்? அவர்களுக்கு தண்டனை கொடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?

குற்றம் நடந்த பிறகு பயனடைந்தவர்கள் பட்டியலை கையில் வைத்து கொண்டு அவர்களுக்கு உரிய தனி மனித சுதந்திரத்தை பறிப்பது தவறானது.   இந்த தவறை JJ விஷயத்தில் திமுகவும் செய்தது. குற்றம் சாட்டியஉடனே, நிரூபிக்க படாத குற்றச்சாட்டுகளுக்காக  தண்டனை கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?  இவர்கள் என்ன பெயரை மாற்றிக்கொண்டு, மாறுவேடத்தில், கள்ள கடவுச்சீட்டு கொண்டு நாட்டை விட்டு ஓடியா போய்விட போகிறார்கள்?

தனி மனித சுதந்திரம் பாதிக்கப்படும்போது நமது அடிப்படை ஜனநாயக உரிமை பறிக்கப்படுகிறது.  இதை நாம் அனுமதிக்க கூடாது.  இதுவரை சிபிஐ தூங்கிகொண்டிருந்தபோது சாட்சியங்களும் ஆதாரங்களும் என்னவாயின?

கனிமொழியை கைது செய்ய தேர்தல் முடிவுகளுக்காக காத்துகிடந்து ஏன்?  மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்று அஞ்சிதானே? ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது ஒரு சட்டம், இல்லாதபோது ஒரு சட்டமா? இதுதான் நேர்மையான விசாரனையா?

சிபிஐ ஆடி அசைந்து கொண்டு விசாரணை நடத்திக்கொண்டு இருக்கும், அதுவரை இவர்களை சிறையில் வைத்திருப்பார்கள? அப்படி சிபிஐ குற்றங்களை நிரூபிக்க தவறினால், பறிக்கப்பட்ட தனி மனித சுதந்திரங்களுக்கு என்ன விலை கொடுப்பார்கள்? 

எனவே குற்றம் சாட்டப்பட்டவர்களை எல்லாம் சிறையில் அடைத்துக்கொண்டு, அவர்களுக்கு பினைவிடுப்பு கொடுக்ககூடாது என்று வாதாடி நேரத்தை வீணடிப்பதைவிட, விசாரணையில் முனைப்பை காட்டி குற்றவாளிகளை ஆதரங்களுடன் கைது செய்து தண்டனை வாங்கிகொடுங்கள்.  அதுவரை தனி மனித உரிமைகளை பறிக்காதீர்கள்.

ஜோசப்.



Sunday, May 22, 2011

கொடுத்தது பத்து, எடுத்தது? !!!!!!!!

22-5-2011 அன்று தினத்தந்தியில் வெளியான முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 'மன ஓலம்'  உள்ளத்தை தொடுவதாக உள்ளது.  சிறுவயது முதலே தனக்கு உரியவைகளை பொதுமக்களுக்கு கொடுத்து உள்ளமகிழ்சியும் பேருவகையும் கொண்ட சிறந்த தமிழின தலைவர் முக, தான் கொடுத்தவைகளை பட்டியலிட்டு காட்டியிருகின்றார் அவற்றை கூட்டி பார்த்தால் கிட்டத்தட்ட பத்து கோடி ருபாய் அளவுக்கு வருகின்றது. 
ஒரு தனி மனிதனாய் இவ்வளவு செய்வது பாராட்டத்தக்கது. ஆனால் உங்கள் சந்ததிகளும் கட்சியினரும் பொது மக்கள் பணத்தை தனி நிறுவனங்களுக்கும், தனி மனிதர்களுக்கும் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கொள்ளை பொருளாய் கொடுத்ததுதான் பிரச்சனை. நீங்கள் மக்களுக்கு கொடுத்தது பத்து கோடி ஆனால் மக்களிடமிருந்து எடுத்தது ?    180000 கோடி. 

பிள்ளைகள் தப்பு செய்த போது தட்டி கேட்காததால் தந்தையாய் தோல்வி, 
உங்கள் மந்திரிகள் தவறுசெய்தபோது தட்டி கேட்காததால் தலைவராய் தோல்வி, கொள்கைகளை காத்தவர்கள் கொள்ளையர்களை காக்க முயற்சிக்கும்போது அரசியலிலும் தோல்வி. 

வெற்றி இலக்கை அடைவதற்கு சற்று முன் இவ்வளவு பெரிய சறுக்கலா?


Saturday, May 14, 2011

2011 - தேர்தல் - தமிழக மக்களின் தோல்வி !

இந்த சிறப்பான ஆழமான கருத்தை கூறியவர் யார் தெரியுமா? குஷ்பூ ! ஒரு பேட்டியில் "இந்த தோல்வி திமுக வின் தோல்வி அல்ல, மாறாக தமிழக மக்களின் தோல்வி" என்று கூறியுள்ளார்.  2006 தமிழக சட்டசபை தேர்தலில் மொத்த வாக்குகளில் 26.40 சதவிகிதம் பெற்ற திமுக, கூட்டணி கட்சிகளின் ஆதரவில் மொத்தம் 44.57 சதவிகித வாக்காளர்களின் பிரதிநித்துவம் மட்டுமே பெற்று ஆட்சி அமைத்தது.  இதைதான் ஜெயலலிதா திரும்ப திரும்ப மைனாரிட்டி அரசு என்று கூறிக்கொண்டு இருந்தார்கள். 

ஆனால் 2011 தேர்தல் நிலவரம் மிகவும் வித்யாசமானது. மாற்றத்தை மட்டும் விரும்பி மக்கள் வாக்களிக்கவில்லை. எதிர் கட்சி அந்தஸ்து கூட உங்களுக்கு கொடுக்கப்படவில்லை.  இதற்கு என்ன பொருள்? உங்களுக்கு,  அடுத்த அரசின் நடவடிக்கைகளை சட்டமன்றத்தில் விமர்சிக்கவோ, கேள்வி கேட்கவோ மக்கள் அனுமதிக்கவில்லை.  உங்கள் திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால் என்ன காரணத்திற்க்காக இப்படி நடந்தது? எரிகிற வீட்டில் பிடுங்குகிறவரை லாபம் என்று தமிழக எதிர்காலத்தை பற்றி யோசிக்காமல் ஆட்சி செய்ததுதான் காரணம். 

TIMES NOW டிவியில் தமிழக மக்கள் ஓட்டு போட திமுக பணம் வழங்கியது என்று வேறு கட்சியினர் கூறியபோது  - ( இந்த விஷயத்தில் யாரும் யாரையும் குற்றம் சாட்ட முடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.) -  திருமதி ஜெயந்தி நடராசன் அவர்களும் திருமதி குஷ்பூ அவர்களும் தமிழர்களை முட்டாள்கள்  என்று நினைக்கிறீர்களா? என்று நல்ல பதில் கொடுத்தார்கள், ஆனால் 2011 - தேர்தல் தமிழக மக்களின் தோல்வி என்று கூறியபோது, எழுதி கொடுத்ததை மனப்பாடம் செய்து வசனம் பேசியது போல் இருந்தது!  - உங்களை குற்றம் சொல்ல முடியாது, உங்கள் நடிப்பு திறமையை பார்த்து வியந்து உங்களுக்கு கோயில் கட்டிய தமிழகமல்லவா இது?


 
ஜோசப்
 


Friday, May 13, 2011

2011-மீண்டும் ஜெயலலிதா முதல்வராகிறார்.

தி மு க மீண்டும் எழுமா என்பது வரும் ஐந்து ஆண்டுகளில் AIADMK எப்படி ஆட்சி செய்யபோகிறது என்பதை பொறுத்துதான் இருக்கிறது. மக்களால் கொடுக்கப்பட்ட அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்து சொந்த நலன்களில் கவனம் செலுத்தியதே DMK வின் வீழ்ச்சிக்கு காரணம். 

அறுவடையில் மட்டும் பங்கு கொண்டவர்கள் செய்த தவறுகள்,  உழுது விதைத்து வளர்த்தவர்களுக்கு வினையாய் போய்விட்டது. தன் வாழ்நாள் முழுவதும் கட்சிக்காக உழைத்து, வாழ்நாள் சாதனையாளர் என்ற முடியை சூடுவதற்குள்,  தன் குடும்ப உறுப்பினர்களும் கட்சியினரும் சேர்ந்து செய்த ஊழல்களினாலும் தான்தோன்றித்தனங்களினாலும் முகத்தை மூடிக்கொண்டு அவமானப்பட்டு தன் வாழ்க்கை தோல்வியில் முடிவதை இந்த தள்ளாத வயதில் சகித்துக்கொண்டிருக்கும் கலைஞரை பார்க்க பரிதாபமாக உள்ளது. 


DMK குடும்பத்தில் பிளவு ஏற்படுமா என்று TIMES NOW டிவி யில் கேட்கப்பட்டபோது "எங்கள் குடும்பத்தில் பிளவு ஏற்படாது" என்று குஷ்பூ உரிமை எடுத்து கொண்டாலும் நடந்து முடிந்த தேர்தல் பிரசாரத்தில் உங்கள் பேச்சுக்கள் எங்களை எரிச்சல் அடைய செய்தன. 

குஷ்பூ, வடிவேலு, பாக்கியராஜ் ஆகியவர்கள், "எள் தான் எண்ணைக்கு காய்கிறது, எலி புழுக்கை எதற்கு காய்கிறது?" என்ற பழமொழியை நினைவூட்டினார்கள். 

தங்கள் வாழ்க்கையையே தமிழ் நாட்டிற்காக அர்ப்பணித்தவர்கள், கண்ணியம் மிக்கவர்களான பகுத்தறிவு பகலவன், பேரறிஞர், கலைஞர், வைகோ  போன்றவர்கள் அலங்கரித்த பிரசார மேடைகளை இப்போது அலங்கரித்தவர்கள் யார்? அவர்களை ஏன் அனுமதித்தீர்கள்? 

ரத்தத்தை சூடாக்கி பகுத்தறிவை தூசிதட்டிய உங்கள் அம்பு பேச்சுக்கள் எங்கே?  நகைச்சுவை நம் மண்ணில் மலிந்து கிடக்கின்றது. அதை கேட்கவா உங்களை நாடினோம்? 
ஜெயலலிதாவின் பெயர் கொண்ட அனைத்தையும் விமர்சனம் செய்துவிட்டு பெயர் மாற்றினீர்கள் அதில் நியாயம் இருந்தது, பிறகு எதற்கு எல்லா திட்டங்களுக்கும் "கலைஞர்" திட்டம் என்று பெயர் வைத்தீர்கள்? பொது விநியோக பொருள்களின் பாக்கெட்களில் உங்கள் போட்டோ ஏன் வந்தது?

அரசாங்கம் பார்க்க வேண்டிய வேலைகளை பார்க்காமல் விட்டுவிட்டு, எங்கள் வீடுகளுக்கு டிவி  வாங்கி தர உங்களை யார் கேட்டது? என் மனைவியை கர்ப்பமாக்கும் எனக்கு அவளுக்கு வேண்டியதை செய்ய முடியாதா?  நீங்கள் யார் இதையெல்லாம் கொடுப்பதற்கு? இதெல்லாம் தனி நபர்கள் தங்களுக்கு செய்துகொள்ள கூடியவை. 

தனி மனிதனால் செய்யமுடியாததை அரசாங்கம் செய்ய வேண்டும். சாலைகள் அமைக்க வேண்டும், சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும், மக்களின் வரிப்பணம் வீணாகாமல் சரியான திட்டங்களை தீட்டி செயல்படுத்த வேண்டும்.


இப்படி விதை நெல்லை சமைத்து சாப்பிட்டால் எதிர்காலம் என்னாவது? தன் வாலை தனக்கே சமைத்து போட்டாலும் கறி சோறு போட்டான் என் எஜமானன் என்று நாய் வேண்டுமானால் நன்றியுடன் இருக்கலாம்.  ஆனால் எங்கள் வரிப்பணத்தை எடுத்து எங்களுக்கே கொடுத்துவிட்டு "நாங்கள் சாதித்தோம், சொன்னதை செய்தோம், தமிழக மக்கள் நன்றியுடன் வாக்களிப்பார்கள்"  என்று எங்களை ஏளனம் செய்ததை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எரிச்சலடைந்துவிட்டோம் மன்னித்து விடுங்கள். 

உப்பை வாரி தின்றவன் தண்ணீரை குடிக்கவேண்டும், வினை விதைத்தவன் வினை அறுப்பான், தீதும் நன்றும் பிறர் தர வாரா. போன்ற பழமொழிகள் தமிழுக்கு பெருமை. ஆனால் இவற்றில் உங்கள் கட்சியினருக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதா? பொது வாழ்க்கைக்கு வந்த உடனேயே கனிமொழிக்கு இந்த சோதனைகள் எதற்கு? 


கொள்கைகளுக்காகவும், உரிமைகளுக்காகவும் போராட்டங்கள் நடத்தி சிறை சென்ற பாரம்பரியம் இப்போது, கொள்ளைகளுக்காகவும், அதிகார வரம்புமீரல்களுக்காகவும், கூடி சதி செய்ததற்காகவும் சிறை செல்வது வெட்ககேடுதானே?

ஜோசப்







Tuesday, May 10, 2011

If I were Pakistan's Advisor?

Hi Again,

Exposed, Shameful, Deceptive, beguile, & Deceit Pakistan has an immediate agenda to save its ugly face NOW!  Harboring the most wanted under their armpit and shamelessly getting alms from US to pretend hunting for him (OBL).  Exposed and Naked they now need to save their ugly face.  The whole world is watching them being reprehended by the one who declared them their friend and called them as one of the Most Favoured Nations (MFN)

What Next?  Is it not now very urgent for Pakistan to save its face?  In order to buy time to cool the issue, it urgently needs to distract the whole world.  

So at this juncture, if i were to advise Pakistan, I would suggest them to launch a massive assault on India, Preferably with an Atom Bomb which they have ill fetched, and justify its action by declaring in their parliament (of course with a lot of rehearsal), "It is a matching response to India which have demanded arrest of , trial and punishment to our Real Leaders and by that way has trespassed our Sovereignty"


Joseph

Thursday, May 5, 2011

அமெரிக்கா தொடர்ந்து பாகிஸ்தானுக்கு பண உதவி செய்யும்.

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பாகிஸ்தானில் அமெரிக்க போர் ஹெலிகாப்டர்கள் ரகசியமாக ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறார்கள் அது இந்த அணு சக்திபடைத்த பாகிஸ்தானுக்கு தெரியவேயில்லை.  இப்படிப்பட்ட பாகிஸ்தானுக்கு உதவுவதால் அமெரிக்காவுக்கு என்ன பயன்?  இது உதவி அல்ல, மாறாக, அமெரிக்கா தங்கள் ராணுவ நிலைகளை அங்கு வைத்திருப்பதற்கு வாடகை.  ஆண்டுக்கு 6000 கோடி ருபாய் கொடுத்தேனும் தங்கள் ராணுவ நிலைகள் இங்கு இருந்தால்தான் அவர்களால் பூமி உருண்டையின் இந்த பக்கம் இருக்க முடியும். அணுவை பற்றி தெரியாத நாய்களுக்கு அணு உலைகளையும் அணு ஆயுதங்களையும் கொடுத்து தங்கள் வியாபாரத்தை பெருக்கி கொண்டிருக்கும் வியாபார தரகன் தான் அமெரிக்கா. செலவில்லாமல் வந்த அணு விஞ்ஞான விபரங்களை இந்த நாய் (பாகிஸ்தான்) ஈரானுக்கு கொடுத்திருக்கின்றது. 

அமெரிக்காவின் இந்த ஈன தந்திரங்கள் எல்லாம் எதற்கு? ரஷியாவின் உதவியினால் வளர்ந்துவரும் இந்தியாவின் வளர்ச்சியை கண்காணிக்கத்தான்.  இந்திய அரசு தமிழீழம் நிர்மூலமாக்கப்படும்போது தலையிடாததால் சீனாவுக்கு இலங்கை செல்லபிள்ளையாகிவிட்டது.  இதனால் மொத்த இந்தியாவுக்கே பாதுகாப்பு சிக்கல் உருவாகியுள்ளது. இந்திய தலைவர்களின் அணுகுமுறை சிறுபிள்ளைதனமாக இருக்கும் பட்சத்தில் நாம் யாரை நொந்து கொள்வது?

இஸ்ரெயலில் யாருக்காவது பாலஸ்தின போர் வீரர்களால் உயிரிழப்பு ஏற்பட்டால், குறைந்தது ஒன்றுக்கு ஒன்று என்று பாலஸ்தீன உயிரை வாங்கியபின்தான் அடுத்த கட்ட பேச்சே நடக்கிறது. ஆனால் தமிழர்களின் நிலைமை என்ன? எத்தனை மீனவர்கள் செத்தாலும் இலங்கை அரசிடம் பல்லை இளித்துக்கொண்டு அங்கு நடக்கும் தங்கள் தொழிலுக்கு இடைஞ்சல் வந்து விட கூடாது என்பதால் செயலற்று கிடக்கும் இந்திய அரசின் மற்றும் அரசியல்வாதிகளின்  பேடித்தனத்திற்கு முற்று புள்ளி வைக்கும் காலம் எப்போது வருமோ?

ஜோசப்.