Saturday, May 14, 2011

2011 - தேர்தல் - தமிழக மக்களின் தோல்வி !

இந்த சிறப்பான ஆழமான கருத்தை கூறியவர் யார் தெரியுமா? குஷ்பூ ! ஒரு பேட்டியில் "இந்த தோல்வி திமுக வின் தோல்வி அல்ல, மாறாக தமிழக மக்களின் தோல்வி" என்று கூறியுள்ளார்.  2006 தமிழக சட்டசபை தேர்தலில் மொத்த வாக்குகளில் 26.40 சதவிகிதம் பெற்ற திமுக, கூட்டணி கட்சிகளின் ஆதரவில் மொத்தம் 44.57 சதவிகித வாக்காளர்களின் பிரதிநித்துவம் மட்டுமே பெற்று ஆட்சி அமைத்தது.  இதைதான் ஜெயலலிதா திரும்ப திரும்ப மைனாரிட்டி அரசு என்று கூறிக்கொண்டு இருந்தார்கள். 

ஆனால் 2011 தேர்தல் நிலவரம் மிகவும் வித்யாசமானது. மாற்றத்தை மட்டும் விரும்பி மக்கள் வாக்களிக்கவில்லை. எதிர் கட்சி அந்தஸ்து கூட உங்களுக்கு கொடுக்கப்படவில்லை.  இதற்கு என்ன பொருள்? உங்களுக்கு,  அடுத்த அரசின் நடவடிக்கைகளை சட்டமன்றத்தில் விமர்சிக்கவோ, கேள்வி கேட்கவோ மக்கள் அனுமதிக்கவில்லை.  உங்கள் திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால் என்ன காரணத்திற்க்காக இப்படி நடந்தது? எரிகிற வீட்டில் பிடுங்குகிறவரை லாபம் என்று தமிழக எதிர்காலத்தை பற்றி யோசிக்காமல் ஆட்சி செய்ததுதான் காரணம். 

TIMES NOW டிவியில் தமிழக மக்கள் ஓட்டு போட திமுக பணம் வழங்கியது என்று வேறு கட்சியினர் கூறியபோது  - ( இந்த விஷயத்தில் யாரும் யாரையும் குற்றம் சாட்ட முடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.) -  திருமதி ஜெயந்தி நடராசன் அவர்களும் திருமதி குஷ்பூ அவர்களும் தமிழர்களை முட்டாள்கள்  என்று நினைக்கிறீர்களா? என்று நல்ல பதில் கொடுத்தார்கள், ஆனால் 2011 - தேர்தல் தமிழக மக்களின் தோல்வி என்று கூறியபோது, எழுதி கொடுத்ததை மனப்பாடம் செய்து வசனம் பேசியது போல் இருந்தது!  - உங்களை குற்றம் சொல்ல முடியாது, உங்கள் நடிப்பு திறமையை பார்த்து வியந்து உங்களுக்கு கோயில் கட்டிய தமிழகமல்லவா இது?


 
ஜோசப்
 


No comments:

Post a Comment