Thursday, May 5, 2011

அமெரிக்கா தொடர்ந்து பாகிஸ்தானுக்கு பண உதவி செய்யும்.

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பாகிஸ்தானில் அமெரிக்க போர் ஹெலிகாப்டர்கள் ரகசியமாக ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறார்கள் அது இந்த அணு சக்திபடைத்த பாகிஸ்தானுக்கு தெரியவேயில்லை.  இப்படிப்பட்ட பாகிஸ்தானுக்கு உதவுவதால் அமெரிக்காவுக்கு என்ன பயன்?  இது உதவி அல்ல, மாறாக, அமெரிக்கா தங்கள் ராணுவ நிலைகளை அங்கு வைத்திருப்பதற்கு வாடகை.  ஆண்டுக்கு 6000 கோடி ருபாய் கொடுத்தேனும் தங்கள் ராணுவ நிலைகள் இங்கு இருந்தால்தான் அவர்களால் பூமி உருண்டையின் இந்த பக்கம் இருக்க முடியும். அணுவை பற்றி தெரியாத நாய்களுக்கு அணு உலைகளையும் அணு ஆயுதங்களையும் கொடுத்து தங்கள் வியாபாரத்தை பெருக்கி கொண்டிருக்கும் வியாபார தரகன் தான் அமெரிக்கா. செலவில்லாமல் வந்த அணு விஞ்ஞான விபரங்களை இந்த நாய் (பாகிஸ்தான்) ஈரானுக்கு கொடுத்திருக்கின்றது. 

அமெரிக்காவின் இந்த ஈன தந்திரங்கள் எல்லாம் எதற்கு? ரஷியாவின் உதவியினால் வளர்ந்துவரும் இந்தியாவின் வளர்ச்சியை கண்காணிக்கத்தான்.  இந்திய அரசு தமிழீழம் நிர்மூலமாக்கப்படும்போது தலையிடாததால் சீனாவுக்கு இலங்கை செல்லபிள்ளையாகிவிட்டது.  இதனால் மொத்த இந்தியாவுக்கே பாதுகாப்பு சிக்கல் உருவாகியுள்ளது. இந்திய தலைவர்களின் அணுகுமுறை சிறுபிள்ளைதனமாக இருக்கும் பட்சத்தில் நாம் யாரை நொந்து கொள்வது?

இஸ்ரெயலில் யாருக்காவது பாலஸ்தின போர் வீரர்களால் உயிரிழப்பு ஏற்பட்டால், குறைந்தது ஒன்றுக்கு ஒன்று என்று பாலஸ்தீன உயிரை வாங்கியபின்தான் அடுத்த கட்ட பேச்சே நடக்கிறது. ஆனால் தமிழர்களின் நிலைமை என்ன? எத்தனை மீனவர்கள் செத்தாலும் இலங்கை அரசிடம் பல்லை இளித்துக்கொண்டு அங்கு நடக்கும் தங்கள் தொழிலுக்கு இடைஞ்சல் வந்து விட கூடாது என்பதால் செயலற்று கிடக்கும் இந்திய அரசின் மற்றும் அரசியல்வாதிகளின்  பேடித்தனத்திற்கு முற்று புள்ளி வைக்கும் காலம் எப்போது வருமோ?

ஜோசப்.

No comments:

Post a Comment