Monday, May 2, 2011

மிகப்பெரும் வழக்கறிஞர் ஜெயலலிதாவா கருணாநிதியா!

ஜெயலலிதா தன்னை மிகப்பெரும் வழக்கறிஞராக கற்பனை செய்துகொண்டு நிறைய கேள்விகளை கேட்டிருக்கிறார். 2 ஜி  அலைகற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கு நடைபெற்று கொண்டிருப்பதால், அவைகளுக்கு எல்லாம் பதில் சொல்வது சட்டப்படி சரியாக இருக்காது. 

மேற்கண்ட நியாயமான கூற்று கலைஞர் அவர்களது!

பிறகு எப்படி சட்ட ரீதியாக நடக்கும் வழக்கில் சட்ட ரீதியாக ஜெயலலிதா வாய்தா வாங்குவதை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்தியது அவர் கட்சி? 

பிறகு எப்படி "குற்றம் செய்யாதவர்கள் மீது , அவா இவா என்று கூறி கிண்டல் செய்ததால் கொலை வழக்கு போட்டு பழி வாங்குகிறார்கள்" என்று வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே தீர்ப்பு கூறினார் கலைஞர்? - ஜெயேந்திரர் மீது அப்படி என்ன ஒரு திராவிட தாகம்?

உங்கள் குடுமி சண்டையில் நாடு கெட்டதுதான் மிச்சம். பண்ருட்டி தொகுதியில் திரு. வேல்முருகன் அண்ணா பல்கலைகழகம் கொண்டு வர காட்டிய தீவிரம் நீங்கள் நாட்டை ஆள காட்டினால், நம் தமிழ் நாடு எங்கேயோ சென்றுவிடும். 

 ஜோசப். 

No comments:

Post a Comment